22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி... கனடாவில் இதுவரை கொரோனா தொற்றினால் 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 70ஆயிரத்து 033பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரத்து 430பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 17ஆயிரத்து 586பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.